தலைக்கவசத்திற்குள் ஐஸ் போதைப்பொருள்: இளைஞர் கைது

-மன்னார் நிருபர்-

மன்னார் சாவற்கட்டு பகுதியில் மோட்டர்சைக்கிள் தலைக்கவசத்திற்குள் ஐஸ் போதைப்பொருளை கடத்தியவர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவற்காட்டு பகுதியை சேர்ந்த 31 வயது இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

விடத்தல் தீவு பகுதியில் இருந்து ஆர்15 வகை மோட்டார் சைக்கிளில் தலைகவசத்தின் உட்பகுதியில் சூட்சுமமான முறையில் 20 கிராம் 850 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை மறைத்து வைத்து வைத்து வருகை தந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரைக் கைது செய்துள்ள மன்னார் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் மற்றும் சான்று பொருட்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப் படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.