தனிபட்ட தகராறு: ஒருவர் பரிதாபமாக மரணம்

ஹம்பாந்தோட்டை தங்காலை குடாவெல்ல பகுதியில் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குடாவெல்ல பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கும் தங்காலை பொலிசார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.