தகுதியற்ற 12 பாடசாலைமாணவர்களை ஏற்றும் வாகனங்கள் தகுதி நீக்கம்

1,238

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட 12 பேருந்துகள் மற்றும் வேன்கள் சேவைக்கு தகுதியற்றவை என கருதப்பட்டு இன்று திங்கட்கிழமை காலை இயக்கத்தில் இருந்து அகற்றப்பட்டன.

நுவரெலியா மாவட்ட பிரதான வாகன பரிசோதகர் தமிந்த திஸாநாயக்க இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

மஸ்கெலியா, சாமிமலை, பொகவந்தலாவ, நோர்டன் பிரிட்ஜ், தலவாக்கலை, கொட்டகலை உள்ளிட்ட பிரதேசங்களில் இருந்து தினசரி பாடசாலை போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் 30 தனியார் பேருந்துகள் மற்றும் வான்களை சோதனையிடுமாறு ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் நுவரெலியா மாவட்ட பிரதான மோட்டார் வாகன பரிசோதகருக்கு பணிப்புரை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 14 நாட்களாக இப்பகுதிகளில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் கடுமையான சோதனை நடத்தப்பட்டு அதில் 12 பேரின் வாகனங்களை சேவையில் இருந்து அகற்றி, அவற்றின் வருவாய் உரிமங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களைப் பயன்படுத்தும் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் கவலைகளை  பொலிஸாரிடம் தெரிவித்ததை அடுத்து இந்த சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Sureshkumar
Srinath