செந்தில் தொண்டமான் அம்பாறைக்கு விஜயம்

 

-மஜித்புரம் நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்-

அம்பாறை மாவட்ட பொலிஸ் டிஐஜி அவர்களின் வழிகாட்டலில் “போதைப்பொருள் புனர்வாழ்வு” நிகழ்ச்சி  அம்பாறையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்,  பொலிஸ் உயர் அதிகாரிகளும், மதத்தலைவர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் செந்தில் தொண்டமான் தொடர்ந்து உரையாற்றும் போது,

போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுயதொழில் திட்டத்திற்காக நிதியுதவி வழங்குவதாகவும் , இதனைப் போல் இலங்கையில் அனைத்து பாகங்களிலும் நடைமுறை படுத்த வேண்டும் என  தெரிவித்தார்.