சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற விபத்தில் 7வயது சிறுவன் பலி

சுவிட்சர்லாந்தின் சென்காளன் பகுதியில் இன்று புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் 7வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, மாநில பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சென்காளன் (St.Gallen)வுள்ப்கான் வீதியில் (Wolfgangstrasse) பாரஊர்த்தினால் மோதுண்டே இச்சிறுவன் உயரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் 56 வயதுடைய பாரஊர்தி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.