சீரற்ற வானிலையால் மூவர் உயிரிழப்பு ; 471 பேர் பாதிப்பு

புலத்கோபிடிய, இம்புல்பே, கேகாலை ஆகிய பிரதேசங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் மூவர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சீரற்ற வானிலையால் 9 மாவட்டங்களில் 128 குடும்பங்களைச் சேர்ந்த 471 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும், மூவர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

மேலும் 39 வீடுகள் முழுமையாகவும், 82 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.