கொங்கிரீட் குழாய் சரிந்து விழுந்ததில் மாணவன் பலி

மஸ்கெலியா கார்ட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் கொங்கிரீட் குழாய் சரிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கார்ட்மோர் தோட்டத்தில் மலசலகூடத்திற்கான குழியை வெட்டுவதற்குப் பயன்படும் கொங்கிரீட் குழாய்களை பாடசாலை வளாகத்தில் இறக்கி வைத்துள்ளனர்.

அவ்வாறு பாடசாலையில் இறக்கி வைக்கப்பட்டிருந்த குறித்த கொங்கிரீட் குழாய்கள் மீது ஏறி விளையாடியபோது குழாய் ஒன்று மாணவர் ஒருவர் மீது சரிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து, படுகாயமடைந்த மாணவனை ஆசிரியர்களால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் இடைநடுவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.