குடு ரொஷானுக்கு பிணை

குடு ரொஷான் மற்றும் அவரது சகோதரர் நேற்று புதன் கிழமை கடுமையான பிணை நிபந்தனையின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

யுக்திய நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குடு ரொஷான் 3 கோடி ரூபா ரொக்கப் பிணையிலும், அவரது சகோதரர் 50 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குடு ரொஷானுக்கு தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான 7 சரீரப் பிணைகளும் அவரது சகோதரருக்கு தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான நான்கு பிணைகளும் விதித்து உத்தரவிடப்பட்டது.