கிச்சு கிச்சு மூட்டி விளையாடிய கைதிகள் : கொலையில் முடிந்த விளையாட்டு

கைதிகள் இருவர் விளையாடி கொண்டிருந்த போது ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் திருகோணமலை சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கைதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் கிச்சு மூட்டி விளையாடியுள்ளனர் இதன்போது ஒருவர் மற்றைய கைதியை தூக்கி தரையில் அடித்தமையால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக திருகோணமலை துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்போது,  ​​தாக்குதலுக்கு உள்ளான கைதி தலையில் அடிபட்டு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருகோணமலை கிண்ணியா மஹரூப் நகரைச் சேர்ந்த ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்தார்.

குறித்த கைதிகள் இருவரும் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த நண்பர்கள் என தெரியவந்துள்ளது.