![](https://minnal24.com/wp-content/uploads/2024/04/w980-p16x9-2024-02-10T065316Z_581295930_RC2AZ5AJD81C_RTRMADP_3_UKRAINE-CRISIS-ATTACK-KHARKIV.jpg)
கார்கிவ் மீது ரஷ்யா மீண்டும் ஆளில்லா விமானத் தாக்குதல்
யுக்ரைனின் கார்கிவ் நகரில், ரஷ்யா மீண்டும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
கார்கிவ் நகர் மீது இன்று வியாழக்கிழமை அதிகாலை ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நகரத்தின் ஆளுநர் ஒலே சினேஹுபோவ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மீட்பு பணியாளர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களுக்கு வருகைத்தந்த பின்னரும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கார்கிவ் நகரில் இன்று அதிகாலை 4 தடவைகள் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை குறித்த பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடங்கள், பாரியளவில் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.