கள்ளு அருந்தி கொண்டிருந்தவர் திடீரென உயிரிழப்பு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் இளவாலை தெற்கு பகுதியில் உள்ள கள்ளு தவறணையில் கள்ளு அருந்தியவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

சங்குவேலி தெற்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் தங்கவேலு (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர்  தவறணையில் கள்ளு குடித்தவேளை, அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இளவாலை பொலிஸார் அவரது சடலத்தை மீட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.

சடலம் மீதான மரண விசாரணைகளை, திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக, உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172