கரையொதுங்கிய இராட்சத சுறா
கிழக்கு மாகாணத்தின் நிந்தவூர் கடற்கரையில் இராட்சத சுறா மீன் ஒன்று உயிருடன் கரை ஒதுங்கியுள்ளது.
கடலுக்குச் சென்ற மீனவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை இதனை அவதானிகத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் கடற்கரையில் ஒதுங்கி தத்தளித்த குறித்த இராட்சத சுறா மீனை அப்பகுதி மீனவர்கள் ஒன்றிணைந்து மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.