சாக்லேட்டிற்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி

இந்தியாவில் ஹைதராபாத்தின் மெட்ரோ நிலையத்திலுள்ள கடையில் ரொபின் ஜேக்குயூஸ் என்பவர் வாங்கிய சாக்லேட்டில் புழு இருந்துள்ளது.

புழு இருப்பதை அவதானித்த ரொபின்இ அமீர்பெட் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள ரத்னாதீப் கடையில் தான் வாங்கியதற்கான பில்லையும் உடனடியாக வீடியோவாக எடுத்துஇ இதுபோன்ற சுகாதாரப் பிரச்னைகளுக்கு யார் பொறுப்பு? பொருட்களுக்கு தரப் பரிசோதனை எல்லாம் செய்ய மாட்டார்களா என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவின் கீழ் பல பதிவர்கள் தங்கள் கவலைகளை தெரிவித்து வருகின்றனர். இது போல மோசமான பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.