![](https://minnal24.com/wp-content/uploads/2024/02/WhatsApp-Image-2024-02-07-at-11.00.18.jpeg)
கடற்படையின் முன்னாள் தளபதி தயா சந்தகிரி ஐ.ம.ச வில் இணைந்தார்
முன்னாள் கடற்படைத் தளபதியும்,பாதுகாப்பு படைகளின் பதவி நிலை பிரதானியுமான அட்மிரல் தயா சந்தகிரி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளார்.
இலங்கை கடற்படையின் 14 ஆவது கடற்படைத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்றவராவார்.
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டதுடன் கட்சியின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.