கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்ட பெண் பொலிஸாரின் மாமி கைது

பெண் பொலிஸாரின் மாமி ஒருவர் சட்டவிரோத கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தர்கா நகரத்தின் பொந்துபிடிய முதலிகம பிரதேசத்திலேயெ இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது சந்தேகநபரின் வீட்டில் இருந்து 7500 மில்லி லீற்றர் கோடா, காஸ் சிலிண்டர், காஸ் அடுப்பு உள்ளிட்ட பொருள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கசிப்பு தயாரிப்பு செய்வதற்கு தேவையான காஸ் சிலிண்டரை பெண் பொலிஸ் அதிகாரியே தனது மாமிக்கு வழங்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் பொலிஸ் அதிகாரி அளுத்கம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.