எதிர்வரும் இரு தினங்களுக்கு மின்வெட்டு அமுலாகும் நேரம்

நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாளை மற்றும் நாளை மறுதினம் A முதல் W வரையான வலயங்களுக்கு காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இரண்டு மணி நேரம் 15 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இரவில் மின் துண்டிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.