ஈழத்துக் கவிதை இலக்கிய வரலாற்றில் மரியசேவியர் அடிகளின் பங்களிப்பு -ஆய்வரங்கம் 

திருமறைக் கலாமன்றத்தின் ஸ்தாபக இயக்குநர் அமரர்  அருட்கலாநிதி நீ.மரிய சேவியர் அடிகளாரின் பன்முகப்படுத்தப்பட்ட பணிகளை ஆவணப்படுத்தும் முகமாக  ‘கலைத்தூது நீ.மரிய சேவியர் அடிகள்: ஒரு பன்முகப் பார்வை’ என்னும் தலைப்பில்  மெய்நிகர் வழியில் சூம் செயலிக்கூடாக திருமறைக் கலாமன்றம் மாதந்தோறும் நடத்தி வருகின்ற ஆய்வரங்கத் தொடரின் பத்தாவது நிகழ்வு  ஞாயிற்றுக்கிழமை(24.04.2022)  மாலை 7.00 மணிக்கு (இலங்கை நேரம்)இடம்பெறவுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ்  தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் ‘ஈழத்துக் கவிதை இலக்கிய வரலாற்றில் மரியசேவியர் அடிகளின் பங்களிப்பு’ என்னும் தலைப்பில் யாழ்.பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையின்  ஆசிரியரும்,கலை இலக்கிய செயற்பாட்டாளருமான திரு.ந.குகபரன் அவர்கள் ஆய்வினை வழங்கவுள்ளார்.
ஆர்வமுள்ள அனைவரும் சூம் செயலி இலக்கம்  7893644809,கடவுச் சொல் cpa என்பதற்கூடாக இந்நிகழ்வில் இணைந்துகொள்ள முடியும்.