![](https://minnal24.com/wp-content/uploads/2022/03/image_d395136c67.jpg)
இ.தொ.க. வின் தலைவராக செந்தில்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் இடம்பெற்ற, இ.தொ.காவின் தேசிய சபை கூட்டத்திலேயே இவர் நியமிக்கப்பட்டார்.
முன்னாள் தலைவர், அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்குப் பின்னர் வெற்றிடமாக இருந்த இ.தொ.காவின் தலைமை பதவிக்கே செந்தில் தொண்டமான் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.