இலங்கைக்கான இந்தியாவின் ஆதரவு குறித்து ரணிலுக்கு விளக்கம்

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் பொருளாதார ஆதரவு குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

இதேவேளை, இலங்கை கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில், இந்தியா வழங்கியுள்ள உதவிகள் சாதாரணமானவையல்ல என்றும் , இந்தியா இவ்வாறு வேறு எந்த நாடுகளுக்கும் தொடர் உதவிகளை வழங்கவில்லை என்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.