ஆயுதப்படையினரின் தாக்குதலுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்

நேற்று வியாழக்கிழமை இரவு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் உள்ள காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஆயுதப்படையினர் தாக்குதல் நடத்தியமைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் படம்பிடித்துக் கொண்டிருந்த பல ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு சட்டத்தரணி மற்றும் பல ஊடகவியலாளர்கள் உட்பட பலர் ஆயுதப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை அறிந்திருப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தின் போது சட்டத்தரணி நுவான் போபேகே உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருக்கும் இடம் இதுவரை யாருக்கும் தெரியவில்லை, என தெரிவிக்கப்படுகின்றது.

தேவையற்ற மிருக பலத்தை பயன்படுத்துவது இந்த நாட்டிற்கும் அதன் சர்வதேச நற்பெயருக்கும் உதவாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க