அழைப்பு விடுக்கப்பட்ட போது பதவியை ஏற்கவில்லை

நிதியமைச்சர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்தப்போதிலும், நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பதவியை ஏற்காமல் இருக்க தீர்மானித்தேன் என முன்னாள அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் குறிப்பிட்ட சில அதிகாரிகளை கையாள்வது மிகவும் கடினமானது எனவும் இவ்வாறான சூழலில் பொறுப்புகளை நிறைவேற்றுவது மிகவும் கடினமானது.

பொருளாதாரம் சீர்குலைந்து, பாராளுமன்றம் இந்த யதார்த்தத்தைப் புரிய வைத்தாலும், இந்த யதார்த்தத்தை யாரும் புரிந்து கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.