
விடுதியில் போதைப்பொருள் வியாபாரம் – ஏறாவூரில் சம்பவம்
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பலாச்சோலை பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த இரு ஆண்களை 2 கிராம் 1300 மில்லிகிராம் ஜஸ் போதை பொருளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டு தலைமையக பொலஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த விடுதி முற்றுகையிடப்பட்டது.
இதன்போது அங்கு தங்கியிருந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 21, மற்றும் 25 வயதுடைய இரு வியாபாரிகளை கைது செய்ததுடன் ஒருவரிடம் ஒரு கிராம் 800 மில்லி கிராம், மற்றவரிடம் ஒரு கிராம் 500 மில்லிகிராம் ஜஸ் போதைப் பொருட்களையும் மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட கொக்குவில் சிவன் கோவில் வீதியைச் சேர்ந்த பிரதான வியாபாரி கடந்த மாதம் 29 ம் திகதியில் இருந்து தங்கு விடுதியில் ஒரு நாளைக்கு 2 ஆயிரம் ரூபா பணம் செலுத்தி தங்கி வந்துள்ள நிலையில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த வியாபார நண்பன் கடந்த 5ம் திகதி அந்த விடுதிக்கு சென்று பிரதான வியாபாரியுடன் தங்கியிருந்து போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளது பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
