வவுனியாவிலுள்ள உணவகத்தில் உளுந்துவடையில் சட்டைப்பின்
வவுனியாவில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து வாடிக்கையாளர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை வாங்கிய உளுந்து வடையில் சட்டைப்பின் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர் உளுந்து வடையை வாங்கி, வீட்டிற்கு எடுத்துச் சென்று தனது குடும்பத்தினருடன் சாப்பிடத் தயாராக இருந்தபோது, உளுந்து வடை ஒன்றிலேயே சட்டைப்பின் கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து உணவக உரிமையாளரைச் சந்தித்துத் திட்டிய பிறகு, உணவக உரிமையாளர் வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
அத்துடன் உளுந்து வடைக்காகப் பெற்றுக் கொண்ட பணத்தையும் உணவக உரிமையாளர் திருப்பிக் கொடுத்துள்ளார்.
வவுனியாவில் உள்ள உணவகங்களில் பல்வேறு அபாயகரமான பொருட்கள், கழிவுகள் மற்றும் விலங்குகளின் கழிவுகள் அடங்கிய உணவுப் பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.