ரோபோ மூலம் பிரசவம் – சீனாவின் அதிர்ச்சி முயற்சி
சீன விஞ்ஞானிகள் மனித கருவை சுமந்து குழந்தை பெற்றெடுக்கும் ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சீனா, ‘ரோபோட்டிக்’ தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள நாடாகும். அங்கு சமீபத்தில் ரோபோக்கள் விற்பனைக்கு என்றே பிரத்யேக வணிக வளாகம் திறக்கப்பட்டது.
இந் நிலையில், சீனாவின் குவாங்சோவைச் சேர்ந்த ‘கைவா டெக்னாலஜி’ நிறுவனம் கருவை சுமந்து குழந்தை பெற்றெடுக்கும் திறன் உடைய ரோபோவை உருவாக்கும் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்த ஆய்வுக்கு சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் ஜாங் கிபெங் தலைமை தாங்குகிறார்.
இj; தொழில்நுட்பம் வெற்றிபெற்றால், மலட்டுத்தன்மை உள்ள தம்பதியர் அல்லது உயிரியல் கர்ப்பத்தை விரும்பாதவர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து விஞ்ஞானி ஜாங் கிபெங், “இந்த தொழில்நுட்ப ஆய்வு தற்போது மேம்பட்ட நிலையில் உள்ளது. ரோபோவின் வயிற்றில் செயற்கை கருப்பையை பொறுத்தி, செயற்கை முறையில் கருத்தரித்தல் செய்யப்படும். கரு அதில் வளரும். இந்த ரோபோவின் மாதிரி அடுத்த ஆண்டு அறிமுகமாகும்,” என்று கூறுகிறார்.
இத் தொழில்நுட்பம் வெற்றியடைந்தால் ,தாயுடன், கருவில் வளரும் குழந்தைக்கு எப்படி பிணைப்பு ஏற்படும், அதற்கு மன ரீதியாக என்ன தாக்கம் ஏற்படும் போன்ற கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன.