மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி மரணம்
கண்டி – வெலம்பொடை பொலிஸ் பிரிவின் கோவில்கந்த பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 11 வயதுடைய சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
கோவில்கந்த, வட்டப்பொல பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
குறித்த சிறுமி வீட்டின் கூரை பகுதிக்கு ஏணியைப் பயன்படுத்தி ஏறிய நிலையில் குறித்த பகுதிக்கு குரங்குகள் வருவதால் கம்பியில் மின்சார இணைக்கப்பட்டிருந்தது. குறித்த கம்பியில் சிக்கி சிறுமி உயிரிழந்துள்ளார்.
சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வேலம்பொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.