
மஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுதலை!
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை காலை உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மஹிந்தானந்த அளுத்கமகே சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று காலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டில் விவசாய அமைச்சராக மஹிந்தானந்த அலுத்கமகே கடமையாற்றிய போது, தரமற்ற உரங்களை இறக்குமதி செய்வதற்காக சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்தியமை தொடர்பில், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, மஹிந்தானந்த அளுத்கமகே கடந்த 19ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜரானதைத் தொடர்ந்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.