மன்னாரில் 20 மில்லியன் மதிப்புள்ள கேரள கஞ்சா மீட்பு
-மன்னார் நிருபர்-
இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி மன்னாரில் 20 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா .பொதிகள் இன்று திங்கட்கிழமை அதிகாலை மீட்கப் பட்டுள்ளது.
மன்னாரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவு (DCDB) நடத்திய விசேட சோதனை நடவடிக்கையின் போது தலைமன்னார் காவல் பிரிவுக்கு உட்பட்ட நடுக்குடா கடற்கரைக்கு அருகிலுள்ள 30வது காற்றாலை கோபுரத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 20 மில்லியன் கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இந்த கேரள கஞ்சா பொதிகள் இந்தியாவிலிருந்து கடல் வழியாக கொண்டு வரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விடயம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்