மதுபானத்தைக் கடத்திய இளைஞர்கள்: மடக்கி பிடித்த பொதுமக்கள்

மதுபானத்தைக் கடத்திய இளைஞர்கள்: மடக்கி பிடித்த பொதுமக்கள்

சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை மோட்டார் சைக்கிள் மூலம் கடத்தி வந்த இரு இளைஞர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்ததுள்ளனர்.

கொக்கட்டிச்சோலை பகுதியிலிருந்து புதுக்குடியிருப்பு பகுதிக்கு கசிப்பு கடத்தி வந்த இரு இளைஞர்களை பிரதேசவாசிகள் மடக்கிப் பிடித்ததுடன், அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் அடித்து நொறுக்கி உள்ளனர்.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி கஜநாயக்கா தெரிவித்தார்.

இது பற்றி மேலும் தெரியவருவது குறித்த இளைஞர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்குறித்த இளைஞர்கள் வைத்தியசாலையில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அவர்களிடமிருந்து சுமார் 45 லீட்டர் சட்டவிரோதமாக மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மதுபானத்தைக் கடத்திய இளைஞர்கள் மடக்கி பிடித்த பொதுமக்கள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்