பொலிஸ் குழுவினரை கொட்டிய குளவிகள்
-பதுளை நிருபர்-
பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீதும்பிடிய ரபர்வத்தை பகுதிக்கு சென்ற பொலிஸ் குழுவினரை மீதும்பிடிய ரபர்வத்தை பகுதிக்கு செல்லும் வழியிலேயே குளவி கூடு கலைந்து தாக்கியுள்ளது.
கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ள சென்ற பொலிஸ் குழுவினரே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகி உள்ளனர்.
இதன்போது பலத்த காயம் அடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஆபத்தான நிலையில் இல்லை எனவும் வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.