பிறந்து ஒரு நாளில் உயிரிழந்த குழந்தை – யாழில் துயரம்!
-யாழ் நிருபர்-
யாழில் பிறந்து ஒரு நாளேயான ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
அல்வாய் தெற்கு, அல்வாய் பகுதியைச் சேர்ந்த சத்தி துஷ்யந்தினி என்ற தம்பதிகளின் மூத்த பிள்ளையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த குழந்தை கடந்த 08.10.2024 அன்று பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தைகளுக்கு உடல் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் 09.10.2024 அன்று மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் அன்றைய தினமே பி.ப 1.30 மணியளவில் குழந்தை உயிரிழந்தது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொண்ட நிலையிலும் மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை.
இந்நிலையில் குழந்தையின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.