பஸ் வண்டி மிதிபலகையிலிருந்து தவறி விழுந்த மாணவன்!

ஓடும் பஸ்  வண்டி மிதிபலகையில் இருந்து மாணவர் ஒருவர் தவறி கீழே விழுந்த காணொளி சமூக வளைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இந்தச் சம்பவம் குருநாகல் பகுதியில் நிகழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குருநாகலில் தனியார் பஸ் ஒன்றில் பாடசாலை மாணவர்கள் பயணித்துள்ளனர்.

இவ்வாறு பயணித்துக்கொண்டிருந்த வேளை திடீரென மிதிபலகையிலிருந்து மாணவர் ஒருவர் தவறி கீழே விழுந்துள்ளார்.

இந்தச் சம்பவம் பஸ் நிலையத்திற்குச் சென்ற காரின் கமராவில் பதிவாகி வெளிவந்துள்ளது.