
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்களுக்கான சாரணர் பயிற்சி
பட்டிருப்பு கல்வி ஆசிரியர்களுக்கான சாரணர் பயிற்சி பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்களை இலங்கை சாரணிய சங்கத்தில் இணைத்துக் கொள்வதற்கான கலைக்கூறு – 01 பயிற்சி களுதாவளை தேசிய பாடசாலை மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.
சாரணர் பயிற்சி தலைவர் ஏ.புட்கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம ஆரம்பிப்பாளராக பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் கலந்து கொண்டார்.
ஆசிரியர்களுக்கான சாரணர் பயிற்சிகளை பட்டிருப்பு வலய சாரணர் உதவி ஆணையாளர் ஏ.பிரதீபன், சாரணர் பயிற்சியாளர்களான எஸ்.அலோசியஸ், ஏ.உதயகுமார் ஆகியோர் வழங்கினர்.
பட்டிருப்பு கல்வி வலயத்தில் சரணிய சங்கங்களை மீள் உருவாக்கம் செய்து நேர்மை, ஒழுக்கம் மிக்க அர்பணிப்பான எதிர்கால சமூதாயத்தை கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகும் என வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தெரிவித்தார்
இங்கு தெரிவு செய்யப்பட்ட 34 ஆசிரியர்கள் சாரணிய பயிற்சி நெறியில் கலந்து கொண்டனர்.