திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

கம்பஹாவில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரை யக்கல பொலிஸார் நேற்று புதன் கிழமை கைது செய்துள்ளனர்.

யக்கல பொலிஸ் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வரபலான பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவரே இவ்வாறு கைத செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​திருடப்பட்ட 5 மடிக்கணினிகள் மற்றும் 2 தொலைபேசிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

யக்கலை பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.