தங்காலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு

அம்பாந்தோட்டையில் தங்காலை வைத்தியசாலைக்கு அருகிலிருந்து சனிக்கிழமை மாலை வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட வயோதிபர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், 65 வயது மதிக்கத்தக்க 5 அடி 1 அங்குலம் உயரமுடையவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வயோதிபரின் சடலம் தங்காலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.