ஜனாதிபதி எதிர்வரும் திங்கட்கிழமை மாலைதீவுக்கு விஜயம் மேற்கொள்கிறார்

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, எதிர்வரும் ஜூலை 28 முதல் 30,வரை மாலைதீவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்கிறார் .

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி திசாநாயக்க, ஜனாதிபதி முய்சுவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்றும், பரஸ்பர ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் நோக்கில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக்கொள்வார் என்றும் வெளிவிவகார அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு இலங்கை மற்றும் மாலத்தீவுஇடையே முறையான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 60ஆ வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதால், இந்த உத்தியோகப்பூர்வ விஜயம் முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவிக்கப்படுகிறது .

மாலைத்தீவு விஜயத்தின் போது, ஜனாதிபதி வணிக மன்றத்தில் உரையாற்றவும், இலங்கை வெளிநாட்டில் வசிக்கும் சமூக உறுப்பினர்களைச் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

ஜனாதிபதி திசாநாயக்கவுடன் வெளிவிவகார , வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர் .