சவூதி அரேபிய தூதுவருக்கும் இந்திரா கௌஷல் ராஜபக்ஷவுக்குமடையில் சந்திப்பு
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி மற்றும் இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் (NCE) தலைவர் இந்திரா கௌஷல் ராஜபக்ஷ, சம்மேளத்தின் செயலாளர் எம். ஷிஹாம் மரிக்கர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகத்தில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பின் போது, இரு நட்பு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பரிமாற்றத்தை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.