கொத்துரொட்டிக்குள் நெளிந்த புழுக்கள்

கிளிநொச்சி கனகராஜன்குளம் பகுதியில் உள்ள பிரபல ஹோட்டலில் கொத்துரொட்டியில் புழுக்கள் நெளிந்து ஓடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேரூந்து நேற்று ஞாயிற்று கிழமை இரவு சாப்பாட்டிற்காக கனகராஜன் குளத்தில் நின்றுள்ளது.

இதனையடுத்து பயணிகள் சாப்பாட்டிற்காக இறக்கிய போது பயணிகளில் ஒருவருக்கு வழங்கப்பட்ட கொத்துரொட்டியில் இருந்த இறைச்சியில் புழுக்கள் இருந்துள்ளது.

இதனை குறித்த நபர் காணொளியாக பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இக்காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி பலரின் விசனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்