
கிளிநொச்சியில் வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைப்பு
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாம் கட்ட வாக்குப் பெட்டிகளுடன் பேருந்துக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
நாளைய தினம் நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் முழங்காவில் வாக்களிப்பு நிலையத்திற்குச்செல்லும் முதலாவது பேருந்து இன்று திங்கட்கிழமை காலை 08.30 மணிக்கு புறப்பட்டுச்சென்றது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான எஸ்.முரளிதரன், உதவித் தேர்தல் ஆணையாளர் வே.சிவராசா இணைந்து அனுப்பிவைத்தனர்.
தொடர்ச்சியாக ஏனைய வாக்களிப்பு நிலையங்களுக்கான பேருந்துகளை அனுப்பும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்