காசாவை ஆக்கிரமிக்கும் இஸ்ரேலின் திட்டத்துக்கு எதிர்கட்சித் தலைவர் கண்டனம்

காசா நகரத்தை ஆக்கிரமிக்கும் இஸ்ரேலின் திட்டம், மோதலுக்கு இரு நாடுகள் தீர்வு காண்பதற்கான நம்பிக்கையை அழிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் காசாவை கைப்பற்றினால், அது வெறும் நிலத்தைப் பற்றியது மட்டுமல்ல இரு நாடுகள் தீர்வுக்கான நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்கும் நம்பிக்கையையும் அது உடைத்துவிடும் எனவும் சமூக ஊடகப் பதிவில் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கொள்கையில் ஒரு காலத்தில் ஒற்றுமையாக இருந்த நாடுகள் பிரிந்து செல்லத் தொடங்கும்என்றும்அந்த நம்பிக்கை உடைந்தவுடன், அமைதி கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை கடந்த வெள்ளிக்கிழமை காசா நகரத்தைக் கைப்பற்றும் நோக்கத்தை அறிவித்ததைத் தொடர்ந்து சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார் .