கடல் வழியாக சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்த இரு இலங்கையர்கள் கைது

இலங்கையிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்த இரு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, இராமேஸ்வரம் மரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

தமிழகத்தின் இராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி கம்பிப்பாடு தெற்கு கடற்கரை பகுதியில் இலங்கையைச் சேர்ந்த பைபர் படகு ஒன்றில் இருவர் கரையிறங்கியுள்ளனர்

இவ்வாறு கரையிறங்கியவர்கள் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற இராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இருவரையும் பிடித்து மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில் அவர்கள் இருவரும் இலங்கை புத்தளம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அகதிகளாக தமிழகத்திற்குள் தஞ்சமடைய வந்தார்களா? அல்லது கடத்தல் சம்பவங்களில் தொடர்புடையவர்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக, இராமேஸ்வரம் மரைன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்