ஐந்து சிறுமிகள் வன்கொடுமை : தாத்தா கைது

ஐந்து சிறுமிகளை வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேராதனை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 64 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

8 தொடக்கம் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் நபர் ஒருவர் தொடர்பில் பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த கைது இடம் பெற்றுள்ளது.

வன்கொடுமைக்கு உள்ளான ஐந்து சிறுமிகளும் தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்