ஏப்ரல் 21 தாக்குதல் : விசாரணை அறிக்கையிலுள்ள எந்த பக்கமும் காணாமல் போகவில்லை!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் பக்கங்கள் குறைவடையவோ காணாமல் போகவோ இல்லை என பொறுப்புடன் கூறுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையின் சில பக்கங்கள் காணாமல் போயுள்ளமை சில தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

இந்தநிலையில் இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என கடந்த வாரம் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித் ஹேரத் குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும் அந்த அறிக்கையில் உள்ள எந்த பக்கமும் காணாமல் போகவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்