உயர் அதிகாரியின் விடுதியை துப்பரவாக்கிய தொழிலாளர்கள் இருவருக்கு குளவிக் கொட்டு

வவனியா நிருபர்-

வவுனியா பிரதி மாகாண விவசாய பணிப்பாளரின் விடுதியை துப்பரவாக்கிய திணைக்கள தொழிலாளர்கள் இருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா பிரதி மாகாண விவசாய பணிப்பாளரின் அரச விடுதியை துப்பரவு செய்த திணைக்கள தொழிலாளர்கள் இருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

வவுனியா பிரதி மாகாண விவசாய பணிப்பாளரின்  அரச விடுதியை துப்புரவு  செய்ய திணைக்கள தொழிலாளர்கள் இருவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இரு தொழிலாளர்களும் விடுதியை துப்புரவு செய்த போது அங்கிருந்த குளவிகள் கலைந்து இருவருக்கும் கொட்டியதில்,  இருவரும் வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபபட்டுள்ளனர்.

திணைக்கள தொழிலாளர்களான வே.நாகேந்திரன் (வயது 52), கோணேஸ்வரன் (வயது 46) ஆகிய இருவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்