இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியை சந்தித்தார்
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸ் இன்று புதன்கிழமை காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்தார்.
இதன்போது ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், இலங்கையுடனான தொடர்புகளை மேலும் பலப்படுத்திக்கொள்ள அர்ப்பணிப்பதாகவும் உறுதியளித்தார்.
மேலும் சமுத்திர பாதுகாப்பு, எல்லை நிர்ணயம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் அவுஸ்திரேலியா அரசாங்கம் தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்த அவர் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்திற்கு அவுஸ்திரேலியாவின் உதவி கிட்டும் என்றும், இலங்கைக்குள் நேரடி முதலீடுகளை ஊக்குவிக்க அவுஸ்திரேலியா விருப்பத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.