இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பை தீர்மானிக்க போகும் பாகிஸ்தான்!

மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் தீர்மானம் மிக்க போட்டியொன்று தற்போது நடைபெற்றுவருகின்றது.

குறித்த போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதுகின்றன.

இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இந்தநிலையில் குறித்த போட்டியான இந்திய மகளிர் அணியின் அரையிறுதி வாய்ப்பினை தீர்மானிக்கும் போட்டியாக அமையவுள்ளது.

குறித்த போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி வெற்றிபெறுமாயின் இந்திய மகளிர் அணி அரையிறுதிப் போட்டிக்கான வாய்ப்பினை பெற முடியும்.

அத்துடன் நியூசிலாந்து மகளிர் அணி வெற்றிபெற்றால் அரை இறுதிக்கான வாய்ப்பினை தன்வசப்படுத்திக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்