அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை – 3 வர்த்தகர்களுக்கு அபராதம்

நுகர்வோருக்கு அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று வர்த்தகர்களுக்கு இரத்தினபுரி மற்றும் மதுகம நீதிமன்றங்கள் இன்று திங்கட்கிழமை அபராதம் விதித்தன.

1 கிலோகிராம் கீரி சம்பா அரிசியை ரூ.295க்கு விற்றதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட கிரியெல்லஇ இடங்கொடவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு இரத்தினபுரி நீதவான் நீதிமன்றம் ரூ.210,000 அபராதம் விதித்துள்ளது.

அத்துடன் 70 பெறுமதியான தண்ணீர் போத்தலை ரூ.100க்கு விற்றதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட இரத்தினபுரிஇ குடுகல்வத்தவில் உள்ள ஒரு உணவகத்திற்கும் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றம் ரூ.100,000 அபராதம் விதித்துள்ளது.

இதற்கிடையில்இ 1 கிலோகிராம் கீரி சம்பா அரிசியை ரூ.310க்கு விற்றதாக ஒப்புக்கொண்ட களுத்துறைஇ மதுகம பகுதியில் உள்ள ஒரு கடைக்கு ரூ.100,000 அபராதம் விதித்துள்ளது.