
22 பாம்புகளுடன் விமான நிலையத்தில் பெண் கைது
சென்னை விமான நிலையத்தில் பல்வேறு வகையான 22 பாம்புகளுடன் பெண் ஒருவரை இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.
கோலாலம்பூரில் இருந்து ஏ.கே.13 விமானம் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை சென்னை விமான நிலையத்துக்கு வந்த குறித்த பெண்ணை சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதையடுத்து பொதிகளை சோதனைக்கு உட்படுத்திய போது ஒரு பச்சோந்தியுடன் பல்வேறு வகையான 22 பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஊர்வன சுங்கச் சட்டம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குறித்த பெண் நேற்று சனிக்கிழமை உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்