
வாகன விபத்து: ஐந்து சிறுவர்கள் பலி
வாகன விபத்து: ஐந்து சிறுவர்கள் பலி
அமெரிக்காவின் நிவ்யோர்க் மாகாணத்தின் வெஸ்ட்செஸ்ட்டர் பகுதியில் அமைந்துள்ள அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
8 முதல் 17 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதில் சிறுமி ஒருவரும் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
16 வயதுடைய சிறுவன் ஒருவர் செலுத்திய கார் ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதுண்டு தீப்பற்றிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனத்தில் பயணித்துள்ள 09 வயதுடைய சிறுவன் ஒருவர் பலத்த காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அந் நாட்டு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
