Last updated on April 28th, 2023 at 05:12 pm

புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

 

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் இம்மாதம் 22ம் திகதி வெளியாக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இம்முறை பரீட்சைக்குத் தோற்றி 153 புள்ளிகளுக்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்ற 48,257 மாணவர்கள் உள்ளனர்.

அவர்கள் 10 பாடசாலைகளுக்கு விருப்பத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பிக்க முடியும்.

குறித்த விண்ணப்பங்களை அதிபர்கள் கல்வி அமைச்சின் கணினி தரவு தளத்தில் பதிவு செய்ததன் பின்னர், கல்வி அமைச்சு அவற்றை ஆராய்ந்து மாணவர்களுக்கு பொருத்தமான பாடசாலை ஒன்றை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172