
ஆசிரியர் இடமாற்ற சபை கலைப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்
ஆசிரியர் இடமாற்ற சபை கலைப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்
ஆசரியர் இடமாற்ற சபை கலைப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நாளை ஞாயிறு கல்வி அமைச்சு அழைப்பு விடுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் சாதகமான பதில் கிடைக்காவிடின் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் ஆசிரியர் இடமாற்றச் சபையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கலைப்பதாக அரசாங்கம் கடந்த 17ஆம் திகதி அறிவித்தது.
எனினும், தொழிற்சங்கங்கள் அதனை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்